கூண்டோடு ராஜினாமா-முஷாரபுக்கு எதிர்க் கட்சிகள் மிரட்டல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான அட்டவணையை அந்நாட்டு தேர்தல் கமிஷன் நாளை வெளியிடவுள்ளது.
இந்தத் தேர்தலில் ராணுவ தளபதி பிளஸ் அதிபர் பதவியில் இருக்கும் முஷாரப் மீண்டும் போட்டியிடுகிறார்.
2 பதவிகளையும் வகித்துக் கொண்டு மீண்டும் போட்டியிடும் அவருக்கு எதிர்க் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிபர் தேர்தலுக்கு முன் தளபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தி வந்தன. ஆனால் இதை ஏற்க முஷாரப் மறுத்து விட்டார்.
இதற்கிடையே தனது வேட்பு மனுவை ஏற்கச் செய்யும் வகையில் தேர்தல் கமிஷனின் விதிகளில் முஷாரப் அவரச திருத்தங்களை செய்துள்ளார்.
இதன்படி யாராலும் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க முடியாது.
இதையடுத்து முஷாரப்புக்கு பாகிஸ்தான் எதிர்க் கட்சிகள் புதிய மிரட்டல் விடுத்துள்ளன.
முஷாரப் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடாது. அவர் போட்டியிட்டால் மாகாண சபைகளில் உள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற எம்பிக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications