பெரியார் பிறந்த நாள்: கருணாநிதி அஞ்சலி:br/ஸ்ரீரங்கம் சிலைக்கு கி.வீரமணி மாலை

Subscribe to Oneindia Tamil


சென்னை:

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Thanthai Periyarசென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் கருணாநிதி இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பூங்கோதை ஆலடி அருணா, பரிதி இளம்வழுதி, கே.என்.நேரு, சென்னை மேயர் மா.சுப்ரமணியம் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அண்ணா மேம்பாலப் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக சார்பில் அதன் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதே சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு எதிரே கடந்த ஆண்டு பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நிறுவப்பட்ட பெரியார் சிலைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+