ராமர்: கருணாநிதிக்கு எதிராக வழக்கு
சென்னை:
ராமர் குறித்து இந்து மக்களின் உணர்வுகளை நோகடிக்கும் வகையில் பேசிய முதல்வர் கருணாநிதிக்கு எதிராக, உமாபாரதியின் பாரதிய ஜன சக்திக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பாரதீய ஜனசக்தியின் தமிழகத் தலைவர் ராம தங்கராசு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசும்போது ராமர் பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கின்றார்.
ராமர் யார், அவர் என்ன பொறியாளரா, அப்படியானால் எந்த கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கினார் என்று பேசியிருக்கிறார். அவருடைய இந்த பேச்சு இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
கருணாநிதி அரசியல் சாசன சட்டப்படி முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். ஆனால் இந்த பேச்சு அவர் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை மீறும் செயலாகும். முதல்வராக இருப்பவர் அனைத்து மத மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
இதனை அவர் மீறுவதால் அவரை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மனு இன்னும் பரிசீலனைக்கு வரவில்லை.












Click it and Unblock the Notifications