For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெக்கா மசூதியில் அனாதையாக விடப்பட்ட 2 வயது சிறுவன்!

By Staff
Google Oneindia Tamil News

மெக்கா:

சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி வளாகத்தில் அனாதரவாக விடப்பட்ட 2 வயதுக் குழந்தையை போலீஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

The boy found in Meccaகடந்த வெள்ளிக்கிழமை மெக்கா பெரிய மசூதி வளாகத்தில் ஒரு இரண்டு வயது ஆண் குழந்தை அனாதரவாக விடப்பட்டிருந்ததை போலீஸார் பார்த்து அதை மீட்டனர். பின்னர் அந்தக் குழந்தை காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

அந்தக் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி அதன் பெற்றோரோ மற்றவர்களோ யாரும் இதுவரை வரவில்லை. அந்தப் பையன் யார் என்று தெரியவில்லை. அந்த சிறுவனக்கு சரியாக பேச முடியவில்லை. அந்த வயதிலும் அவன் இல்லை. நாம் பேசுவதும் அவனுக்குப் புரியவில்லை.

இந்தக் குழந்தை காணாமல் போனது குறித்து புகார் எதுவும் பதிவாகவில்லை. எனவே வேண்டும் என்றே இவனது பெற்றோர் இக்குழந்தையை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது என்று மெக்கா காவல்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் முஷின் அல் மய்மான் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X