திமுக அரசை கண்டித்து காங். எம்எல்ஏ உண்ணாவிரதம்
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தி.மு.க அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., வேல்துரை உட்பட 800 பேர் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேரன்மகாதேவியில் உள்ள விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து கென்னடியன் கால்வாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு கென்னடியன் கால்வாயில் எம்.எல்.தேரி என்ற பெயரில் 192 கோடி திட்ட மதிப்பீட்டில் துணை கால்வாய் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால், சேரன்மகாதேவியை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே, திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரை தலைமையில் 10 பெண்கள் உட்பட 800 பேர் இன்று திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் சேரன்மகாதேவியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications