சேது சமுத்திர திட்டத்துக்காக சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள்,
சேது சமுத்திர திட்டத்திற்கு மதவாத சக்திகள் ஒன்று கூடி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமூக விரோதிகளை தூண்டிவிட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
மதவாத சக்திகளுக்கு உச்சநீதிமன்றம் எப்போதும் இடம் கொடுக்கக் கூடாது. சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற உச்சநீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவிகளும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications