மதிமுக பிரமுகர் வீட்டில் 'ஜட்டியுடன்' புகுந்து கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோட்டில் மதிமுக நகரச் செயலாளரின் குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் மதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவரது மனைவி லோகம்மாள். இவர்கள் சிவக்குமார் நகரில் குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் ஜட்டியுடன் புகுந்த சிலர் பெரியசாமியை தாக்கினர். அவரது மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 7 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications