அரசு விழாவில் கருப்பு கொடி காட்ட முயற்சி: 7 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துககுடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் தமிழரசி பெயர் போஸ்டரில் அச்சிடப்படாமல் புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே உள்ளது கவர்னகிரி என்ற கிராமத்தில இன்று மணி மண்டப திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கான போஸ்டரில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியின் பெயர் இடம் பெறவில்லை.
அமைச்சரின் பெயரை புறக்கணிக்கப்பட்டதாக கூறி விழாவுக்கு வரும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு கருப்பு கொடி காட்ட புதிய தமிழகம் கட்சி பிரமுகர்கள் முடிவு செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் உருவானது.
இதனைத் தொடர்ந்து கருப்பு கொடி காட்ட முயற்சித்த புதிய தமிழகம் கட்சி பிரமுகர்கள் மனோகரன், பூவானி லெட்சுமணன், கருப்பசாமி, முருகன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.
போலீசாரின் இந்த கைது நடவடிக்கையால் மேலும் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications