'மன்மத' லியாகத்தின் மார்த்தாண்டம் வீட்டில் ரெய்டு-13 சிடிக்கள் சிக்கின!
மார்த்தாண்டம்:
நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய 'மைக்கேல் மதன காமராஜன்' லியாகத் அலிகான் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தங்கியிருந்த வீட்டில், போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 13 சிடிக்கள் சிக்கின.
சென்னையில் லியாகத் அலியின் வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார் எஸ்.ஐ சேகர் தலைமையில் இன்று மார்த்தாண்டம் வந்தனர். லியாகத் அலிக்கு வீடு எடுத்து கொடுத்த பழனி, வீட்டு உரிமையாளர் ரவீந்தரன் ஆகியோரிடமும் அப்பகுதியிலுள்ள பெண்களிடமும் விசாரணை நடத்தினர்.
பின்னர் லியாகத் அலி தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சிடிக்களை கைப்பற்றினர். அவை ஆபாச சிடிக்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுவதால் அதனை சோதனைக்காக சென்னை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன.
பழனியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அலியின் மற்றொரு புதிய கூட்டாளியான மார்த்தாண்டம் டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் செய்யது அலி என்பவரை பற்றி தகவல் கிடைத்தது.
இதையடுத்து செய்யது அலியையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடந்தப்பட்ட விசாரணையில் லியாகத் அலி தொடர்ச்சியாக மது குடிக்க வரும்போது செய்யது அலியுடன் பழக்கம் ஏற்பட்டதும், அவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டதும், செய்யது அலி வீட்டு புரோக்கர் பழனியை ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் லியாகத் அலி மார்த்தாண்டத்தில் தங்கியிருந்த நாட்களில் அப்பகுதியிலுள்ள இன்டர்நெட் சென்டர்களில் சாட்டிங் செய்துள்ளார்.
இதற்கிடையே லியாகத் அலி கடந்த 1 மாதத்தில் மட்டும் மார்த்தாண்டத்திலுள்ள ஸ்டார் லாட்ஜில் 4 முறை தங்கியது தெரிய வந்துள்ளது.
மேலும் இன்டர்நெட் சென்டர் அமைக்கப் போவதாக கூறி கல்லூரி மாணவிகளிடமும் லியாகத் அலி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்துள்ளது. அந்த மாணவிகளின் பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications