திண்டுக்கல்: நாயுடுவின் ஹெரிடேஜ் பால் நிறுவனத்தில் ரூ. 7.5 லட்சம் திருட்டு
திண்டுக்கல்:
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு சொந்தமான ஹெரிடேஜ் பால் நிறுவனத்தில் ரூ.7.5 லட்சம் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி ரோட்டில் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு சொந்தமான ஹெரிடேஜ் பால் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்தின் லாக்கரில் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ. 10 லட்சம் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாகிகள் நேற்று லாக்கரை திறக்க முயன்றபோது சாவி காணாமல் ேபானது தெரியவந்தது. இதையடுத்து வெல்டிங் கட்டரை வைத்து லாக்கர் உடைக்கப்பட்டது. ஆனால், அதில் இருந்த ரூ. 7.5 லட்சம் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து பால் பண்ணை மேலாளர் பாலமுருகன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications