2 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கஞ்சாவுடன் இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார்.
இதையடுத்து அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் உதயசூரியன் என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
அதே போல முத்தலாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற மீனாட்சி சுந்தரம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ காஞ்சா பிடிபட்டது.
இருவரிடமும் மொத்தமாக 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் பின்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications