செப். 27ல் முஷாரப் வேட்பு மனு தாக்கல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் வருகிற 27ம் தேதி பர்வேஸ் முஷாரப் வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
பாகிஸ்தானில் அக்டோபர் 6ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் போட்டியிட தற்போதைய அதிபரும், ராணுவத் தலைமை தளபதியுமான பர்வேஸ் முஷாரப் வருகிற 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
இதுதொடர்பான முடிவு பிரதமர் செளகத் அஜீஸ் மற்றும் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான செளத்ரி சுஜத் ஹூசேன் ஆகியோரின் சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டது.
தனது தேர்தல் பிரசாரத்தை நாளை பலுசிஸ்தானிலிருந்து முஷாரப் தொடங்குகிறார்.
முஷாரப் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளன்று அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே மிரட்டியுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் முஷாரப்புக்கு எதிராக செயல்பட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications