அதிமுக முன்னாள் எம்.பி மீது வழக்கு
திருநெல்வேலி:
தென்காசி முன்னாள் அதிமுக எம்.பி உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
பாளை மார்கெட் திடலில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் வக்கீல் பிரிவு மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஜெயபிரகாஷ் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் கூட்ட மேடைக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்ததிற்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் வக்கீலின் தலையில் கல்லால் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றார். இதையடுத்து அதிமுகவினர் அந்த ஆசாமியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பலத்த காயமடைந்த ஜெயபிரகாஷ் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிடிபட்டவரிடம் பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நடத்திய விசாரணையில் அந்த நபர் ரெட்டியார் பட்டியை சேர்ந்த சுடலைமுத்து மகன் திருப்பதி என்பதும் திமுக உறுப்பினர் என்றும் தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் திருப்பதியை கீழப்பாட்டத்தை சேர்ந்த ஐகோர்ட் வேம்பையா என்பவரது ஆட்டோவில் அழைத்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் திருப்பதியை திடீரென தாக்கியது.
இதில் போலீஸ்காரர் நடராஜன் உள்பட சிலர் காயமடைந்தனர். இது குறித்து ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக மாநகர் மாநகர செயலாளர் பாப்புலர் முத்தையா, அவைத் தலைவரான முன்னாள் எம்.பி முருகேசன் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பாளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வக்கீலை தாக்கிய திமுக பிரமுகர் திருப்பதியையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications