தெருத் தெருவாக பாஜகவினரை அடித்தாலும் கேட்க நாதியில்லை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!
விருதுநகர்:
பாஜகவினரை தெருத் தெருவாக தேடிப் போய் அடித்து உதைத்தாலும் கேட்க ஒரு நாதியும் கிடையாது என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆவேசமாக பேசியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த வி.எச்.பி. சாமியார் வேதாந்தியைக் கண்டித்து விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரும் திரளான திமுகவினர் கலந்து கொண்ட இந்த போராட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் கலந்து கொண்டார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், தமிழினத் தலைவர் கலைஞருக்கு வட நாட்டு சாமியார் ஒருவர் விலை வைக்கிறார்.
இங்குள்ள பாஜகவினரை நாம் தெருத் தெருவாக தேடிப் போய் அடித்து உதைத்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை என்பதை வட நாட்டு மதவாதத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.