எஸ்.சி.விக்குப் போட்டியாக எம்.எஸ்.ஓ- கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் இன்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். எஸ்.சி.வி. உள்ள அனைத்து இடங்களிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இணைந்து தனியாக ஒரு எம்.எஸ்.ஓவை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சன் டிவியின் டிடிஎச் சேவையை எதிர்த்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சன் டிவி நிறுவனத்தை எதிர்த்து ஸ்டிரைக் நடத்திய அவர்கள் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

SCV

சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ஷகீலன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போது ஷகீலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சன் டிவியின் டிடிஎச் சேவை மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். இதை சட்டரீதியாக நாங்கள் எதிர்ப்போம்.

சன் குழுமத்தின் எஸ்.சி.வி. எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இணைந்து தனியாக ஒரு எம்.எஸ்.ஓ.வை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இதேபால மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+