சிறையில் ஆயுள் தண்டனை கைதி மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் மீது ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கடந்த 30-05-2006 அன்று காவல் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் மாயாண்டிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட மாயான்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சர்க்கரை நோய் மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட மாயாண்டிக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாததால் நோய் தீவிரம் அடைந்தது.
இதனால் சிகிச்சைக்காக மாயாண்டி மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாயாண்டி இறந்து விட்டார்.
இது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications