கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் பொது மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
குமரி கடற்கரை நகரமான தேங்காய்ப்பட்டணம் அருகே ராமன்துறை கிராமம் அமைந்துள்ளது. சுமார் 750 மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை கிராமமான இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
ராமன் துறை பகுதியில் உள்ள கடல் கரை தடுப்பு சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள மேலும் 7 வீடுகள் சேதமடைந்தன. 5ம் நாளாக இன்றும் கடல் சீற்றம் இருந்தது.
தேங்காய்பட்டணம் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு அதிமாக உள்ளதால், கடற்கரை பகுதியில் இருக்கும் பல தென்னை மரங்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் சில நாட்களில் தேங்காய்பட்டணம்-முள்ளுர் சாலை முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications