தமிழகம் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை:
பாஜக தலைமை அலுவலகத்தை தாக்கிய சம்பவம் தொடர்பாக திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆளுநர் பர்னாலாவிடம் பாஜக மனு கொடுத்துள்ளது. திமுகவினரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படுகிறது.
பாஜக தலைவர் இல.கணேசன் தலைமையிலான குழு ஆளுநர் பர்னாலாவை நேற்று இரவு சந்தித்தது. இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும் இடம் பெற்றிருந்தார்.
ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. அனைத்துமே திட்டமிட்ட வன்முறை சதிச் செயல்.
பாசிச திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யக் கோரி மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு ஆளுநரிடம் வழங்கிய மனுவில் வலியுறுத்தியுள்ளோம்.
இந்த்த தாக்குதலைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார் கணேசன்.
இன்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதால், போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.