இலங்கைத் தமிழர்களுக்காக பு. தமிழகம் பேரணி!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இலங்கையில் உணவு, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு உதவக் கோரி புதிய தமிழகம் சார்பில் கோட்டை நோக்கி அக் 6ம் தேதி பேரணி நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 9 தென் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், புதிய தமிழகம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு டிசம்பர் 15ல் மதுரையில் மண்டல மாநாடு நடத்தப்படும். அடுத்த ஆண்டு சென்னையில் மாநில மாநாடு நடத்தப்படும்.

இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்றும் கெடுபிடிகளால், தமிழர்கள் உணவு, மருந்து, இன்றி பெறும் அவதிப்படுகின்றனர். இலங்கைப் பிரச்சனையில் தமிழக கட்சிகள் சுய லாபம் கருதி செயல்படுகின்றன.

இதைக் கைவிட்டு விட்டு இலங்கைத் தமிழர்களுக்கு அரசு உதவக் ேகாரி, புதிய தமிழகம் சார்பில் சென்னையில் வருகிற அக்டோபர் 6ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தவுள்ளோம். பேரணியின் இறுதியில் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+