மானாமதுரையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை!

Subscribe to Oneindia Tamil


மானாமதுரை:

மானாமதுரையில் நேற்று பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பேட்டை தெருவைச் சேர்ந்தவவர் மாயழகு. இவர் மீது கொலை, திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனால் இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த மாயழகு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் மானாமதுரை அருகில் உள்ள பிரமனூர் கால்வாய் தோப்பில் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவல் கிடைத்தவுடன் மானாமதுரை டிஎஸ்பி நாகஜோதி சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மானாமதுரையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+