திருச்சி சிறையில் சுப. இளவரசன் திடீர் உண்ணாவிரதம்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி சிறையில் சுப. இளவரசன் தீடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதாக கூறி தமிழர் விடுதலை இயக்க தலைவர் சுப. இளவரசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரது தலைமையிலான தமிழர் விடுதலை இயக்கமும் அரசால் தடை செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி சிறையில் சுப. இளவரசன் நேற்று தீடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
உண்ணாவிரதத்தை அவர் மாலையில் முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications