தேமுதிகவினரை மருத்துவமனைக்குள் புகுந்து அடித்த விடுதலைச் சிறுத்தைகள்!
கடலூர்:
கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தொண்டர்களை, மருத்துவமனைக்குள் புகுந்து விடுதலைச் சிறுத்தைள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெறித்தனமாக தாக்கியதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகே உள்ள பெரியகங்கணாபுரத்தில், பேனர் கட்டுவது தொடர்பாக தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கிடையே மோதல் எழுந்தது.
இதில், தேமுதிகவைச் சேர்ந்த சண்முகம், குமரன், ஜெயசீலன், லெனின் ஆகியோரும், பதில் தாக்குதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித், சிவபாலன் ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தனர்.
அங்கிருந்த, ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் இரும்பு நாற்காலியைத் தூக்கி தேமுதிகவினரை சரமாரியாகத் தாக்கினர். வெறி கொண்டு அவர்கள் தாக்கியதில், ஏற்கனவே காயமடைந்திருந்த நான்கு தேமுதிகவினரும் மேலும் படுகாயமடைந்தனர்.
இந்த திடீர் தாக்குதலால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து ஓடி விட்டனர்.












Click it and Unblock the Notifications