போலி வாக்காளர் சேர்ப்பு வழக்கு: மாஜி அமைச்சர் அனிதா கோர்ட்டில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
போலி வாக்காளர்களை சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜாரானார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறை கேடாக ஏராளமானோர் சேர்க்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் புகார் எழுந்தது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மீதும் போலி வாக்காளர்களை சேர்த்தது, குறைந்த வயதுடைய வாக்காளர்களை பட்டியலில் இடம் பெற செய்தது, சரியான முகவரி இல்லாத வாக்காளர்களை சேர்த்தது என 3 வழக்குகள் அரசு தரப்பில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு திருச்செந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக இன்று காலை 11 மணிக்கு திருச்செந்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜாரானார்.
அவரை மீண்டும் அக்டோபர் 12ம் தேதி கோர்ட்டில் ஆஜாராக நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications