குண்டு பாய்ந்து நரிக்குறவ பெண் பலி: கொலையா-தற்கொலையா?
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் உடலில் புல்லட் பாய்ந்த நிலையில், நரிக்குறவப் பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
இறந்து கிடந்த பெண்ணின் பெயர் சகுந்தலா (40). இவர் ஒரு நரிக்குறவ பெண் ஆவார். ரத்த வெள்ளத்தில், உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் இவர் இறந்து கிடந்தார்.
நரிக்குறவ கூட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இதுகுறித்து போலீஸில் கூறுகையில், நான் பறவைகளை வேட்டையாடுவதற்காக, எனது துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி வைத்து விட்டு தூங்கி விட்டேன்.
காலையில் எழுந்து பார்த்தபோது சகுந்தலா இறந்து கிடந்தார் என்று கூறியுள்ளார். ரமேஷ் மற்றும் நரிக்குறவ கூட்டத்தைசத் சேர்ந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவறுதலாக குண்டு பாய்ந்து சகுந்தலா இறந்தாரா அல்லது அவரது கூட்டத்தைச் சேர்ந்தவர்களே சுட்டுக் கொன்று விட்டனரா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications