பண்ணையார் நினைவு தினத்தில் பெர்னாண்டஸ்
திருச்செந்தூர்:
போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடே பண்ணையார் நினைவு தினத்தில் பங்கேற்க முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று திருச்செந்தூர் வருகிறார்.
ஆண்டுதோறும் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை இந்த நினைவு தினத்தை நடத்தி வருகிறது. நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி புஷ்பாஞ்சலி, அன்னதானம், 108 பெண்கள் பொங்கல் வைக்கும் போன்றவை நடைபெற்றன.
முன்னதாக தூத்துக்குடி முத்தையாபுரத்திலிருந்து வீர ரதம் புறப்பட்டது. இந்த ரதம் முள்ளிக்காடு, பழைய காயலா, ஆத்தூர், ஆறுமுகனேரி, மூலக்கரை, வழியாக அம்மன் புரத்தில் முடிவடைந்தது.
வீர ரதம் முன்பு அனையா ஜோதி தொடர் ஒட்டடமாக கொண்டு வரப்பட்டது.
இந்த நினைவு தினத்தில் முன்னள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பங்கேற்கிறார்.
வெங்கடேச பணணையார் கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பபடும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி திமுக சார்பில் மத்திய உள்துறை இணையமைச்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது.