பரதர் இனத்தை எம்.பி.சியில் சேர்க்க கோரிக்கை
நாகர்கோவில்:
பரதர் இனத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரியில் குமரி மாவட்ட மீனவரணி ஆலோசனை கூட்டம் மாநில மீனவரணி செயலாளர் கலைமணி தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் ஜெனிபர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
குமரி மாவட்ட மீனவர்களான பரதர் இனத்தவரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அழிக்கால், பிள்ளைத்தோப்பு, கடியப்பட்டிணம், பெரியவிளை, சின்னவிளை, மண்டைக்காடு, புதூர், கொட்டில்பாடு, கோடிமுனை, பொழிக்கரை, கேசவன்புத்தன்துறை, பள்ளம்துறை உள்பட 20 கிராமங்களில் தூண்டில் வளைவு பணியை விரைவு படுத்திட வேண்டும்.
காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதியும், மீட்பு படகும் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications