காங். பெண் எம்.பி மீது துப்பாக்கிச் சூடு
டெல்லி:
டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணா தீரத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரும், அவரது கணவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டெல்லி, கரோல்பாக் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிருஷ்ணா தீரத். இவர் நேற்று இரவு தனது கணவருடன் காரில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். கணவர்தான் காரை ஓட்டினார்.
அப்போது திடீரென கார் முன்பு பாய்ந்த ஒரு மர்ம நபர், கார் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் காரைத் துளைத்துக் கொண்டு குண்டு பாய்ந்தது. இருப்பினும் தீரத் மற்றும் அவரது கணவருக்கு காயம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். அவர் யார், எதற்காக சுட்டார் என்று தெரியவில்லை. தனக்கு எந்த எதிரியும் இல்லை என்று போலீஸாரிடம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தலைநகரில், காங்கிரஸ் எம்.பியின் கார் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மந்திர மார்க் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications