For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் ஐஸ் கட்டி மழை!
சென்னை:
சென்னை நகரில் இன்று மாலை திடீரென ஐஸ் கட்டி மழை பெய்ததால் மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இன்றும் கூட காலை முதல் மாலை 4 மணி வரை நல்ல வெயில் அடித்தது.
இந்த நிலையில் 4 மணிக்கு மேல் நகரமே இருண்டது. சில நிமிடங்களில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பலத்த இடியுடன் கன மழை பெய்தது.
அப்போது ஐஸ் கட்டி மழையும் பெய்யத் தொடங்கியது. பெரிய பெரிய ஐஸ் கட்டிகள் வந்து விழுந்ததால் மக்கள் வியப்படைந்தனர்.
சாலைகளிலும், வீடுகளின் மொட்டை மாடிகளிலும் விழுந்த ஐஸ் கட்டிகளை எடுத்து மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெளுத்த மழையால் நகரின் பல முக்கிய சாலைகளில் நீர் தேங்கி பெரும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.
Story first published: Saturday, December 15, 2007, 22:02 [IST]