முஷாரப் வேட்பு மனு தாக்கல்
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முஷாரப் சார்பில் பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6ம் ேததி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இன்று ஒரு நாள் மட்டும்தான் வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை முஷாரப் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் செளகத் அஜீஸ், முஷாரப்பின் வேட்பு மனுவை தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார்.
ஏற்கனவே வக்கீல்கள் சங்கம் சார்பில் முன்னாள் நீதிபதி வஜூதின் அகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல பெனாசிர் கட்சி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர் முஷாரப் நேற்று பலுசிஸ்தான் மாகாணத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை முஷாரப் தொடங்கினார். தொடர்ந்து நாடு முழுவதும் பிரசாரம் செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications