மொபைல் போன்களில் 'ஒன்இந்தியா' செய்திகள்
பெங்களூர்:
'ஒன்இந்தியா' இணையதளத்தின் செய்திகளை இனி WAP தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போன்களில், அவரவர் தாய்மொழியில் அறிந்து கொள்ளலாம்.
உலகச் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் வழங்கி வரும் நமது ஒன்இந்தியா.இன், மொபைல் போன்களிலும் இனிமேல் செய்திகளை அறிந்து கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் செய்திகள், விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், தியேட்டர் ஷோக்கள் ஆகியவற்றை WAP வசதியுடன் கூடிய மொபைல் போன்களில் அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து கிரேணியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பி.ஜி.மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மொபைல் போன்கள் பெரும் புரட்சியைப் படைத்து வருகின்றன. அதனால்தான் இந்த வாப் வசதி கொண்ட செய்தித் தளங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்தியாவில் ஐந்தில் ஒருவர், இன்டர்நெட்டுடன் கூடிய மொபைல் போனைப் பயன்படுத்துவதாக டிராய் தகவல் கூறுகிறது. கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி, மொபைல் போனாக இருந்தாலும் சரி, மக்களுக்கு செய்திகளை உடனக்குடன் தருவதில் நாங்கள் அக்கறையுடன் உள்ளோம் என்று கூறியுள்ளார் மகேஷ்.












Click it and Unblock the Notifications