இலங்கையில் தமிழ் பாதிரியார் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
மன்னார்:
இலங்கையின் மன்னார் மாவட்டம் வெள்ளங்குளம் பகுதியில், தமிழ் பாதிரியார் ரஞ்சித்தை இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொகான்றனர். அவருடைய உதவியாளர் படுகாயமடைந்தார்.
புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவ இடத்திலேயே பாதிரியார் ரஞ்சித் பலியானார். குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், அவருடைய உதவியாளர் ஜூலின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரசு வசம் உள்ள மன்னார் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் வசம் உள்ள மன்னாருக்கு ரஞ்சித்தும், அவருடைய உதவியாளரும் வந்தனர். ஓமந்தை சோதனைச் சாவடி வழியாக அவர்கள் வந்தபோது வெள்ளங்குளம் பகுதியில் ராணுவம் பாதிரியாரை சுட்டுக் கொன்றதாக விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications