கண்ணகியை கேலி செய்வதா?- விஜயகாந்த் கொடும்பாவி எரிப்பு!
சேலம்:
கண்ணகியை கேலி செய்து பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கூடவே ராமர், அத்வானி, வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.
சேலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிருத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ராமர், அத்வானி, வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர்.
மேலும், கண்ணகியை கேலி செய்து பேசியதாக கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடும்பாவியையும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் குறுக்கிட்டு எரிந்த நிலையில் இருந்த கொடும்பாவிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ராமர் கட்டிய பாலம்தான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என முதல்வர் கருணாநிதி கேட்டதற்கு விஜயகாந்த் விடுத்த அறிக்கையில், கண்ணகி மதுரையை எரித்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications