For Daily Alerts
Just In
நெஞ்சு வலி என வந்த பெண்ணிடம் சில்மிஷம் - டாக்டர் கைது
சென்னை:
நெஞ்சு வலிப்பதாக கூறி சிகிச்சை பெற வந்த பெண்ணின் மார்பில் கை வைத்து சில்மிஷம் செய்த டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திரு.வி.க.நகர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் பாலாஜி. இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த ஷர்ளினி மோசிஸ் (27) என்ற பெண் நெஞ்சு வலிப்பதாக கூறி சிகிச்சைக்காக வந்தார்.
அப்போது பாலாஜி, சோதித்துப் பார்ப்பதாக கூறி ஷர்ளினியின் மார்பில் கை வைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அலறி அடித்து வெளியே ஓடி வந்த ஷர்ளினி இதுகுறித்து திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் டாக்டர் பாலாஜியைக் கைது செய்தனர்.
Story first published: Saturday, December 15, 2007, 22:02 [IST]