மின்னல் தாக்கி 14 பேர் மயக்கம் !
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரத்தில் மின்னல் தாக்கி 14 பேர் மயக்கம் அடைந்தனர்.
சிதம்பரம் புவனகிரியை அடுத்த நந்தம்மேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், விவசாயி. இவரது வயலில் நேற்று 12 பெண்களும், 2 ஆண்களும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென வானம் இருட்டியது. மழை கொட்டியது. அப்போது மின்னல் தாக்கியது. இதில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 14 பேரும் மின்னல் தாக்கி மயங்கி விழுந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆர்டிஒ, தாசில்தார் ஆகியோர் விரைந்து வந்தனர். பாதிக்கப்பட் மக்களை சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications