130 பேருடன் 'ரிட்டர்ன்' ஆகும் பெனாசிர்!
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் திரும்பத் திட்டமிட்டுள்ள பெனாசிர் பூட்டோவுடன் அக்கட்சியைச் சேர்ந்த 130 பேரும் லண்டனிலிருந்து தாயகம் திரும்புகின்றனர். இதற்கான விமான டிக்கெட்டுக்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி புக் செய்துள்ளது.
முஷாரப் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தவுடன் தானாகவே நாட்டை விட்டு வெளியேறினார் பெனாசிர் பூட்டோ. அதன் பிறகு அவர் லண்டனில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் நாடு திரும்ப முடிவு செய்துள்ளார் பெனாசிர். அக்டோபர் 17ம் தேதி நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார் பெனாசிர். இதற்காக பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அன்றைய தினம் லண்டனிலிருந்து, துபாய் வழியாக கராச்சி வரும் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளது.
17ம் தேதி கிளம்பி 18ம் தேதி கராச்சி வந்து சேருகிறார் பெனாசிர். அவருடன் மொத்தம் 130 பேர் உடன் வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள், இங்கிலாந்து எம்.பிக்கள், பாகிஸ்தான் மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பெனாசிருடன் வரவுள்ளனர்.
தறபோது பெனாசிர் பூட்டோ அமெரிக்காவில் உள்ளார். இந்த வார கடைசியில் அவர் லண்டன் திரும்புகிறார். அக்டோபர் 3ம் தேதி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அப்போது பெனாசிரின் பாகிஸ்தான் பயணம் குறித்து இறுதி செய்யப்படவுள்ளது.