கருணாநிதிக்கு நல்ல புத்தி தர வேண்டி பூஜை - வி.எச்.பி. தொண்டர்கள் கைது
புதுச்சேரி:
புதுச்சேரி ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில், முதல்வர் கருணாநிதிக்கு நல்ல புத்தி தர வேண்டி சிறப்பு பூஜை செய்து, தேங்காய் உடைத்த விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்ளைப் போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் இன்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் கூடினர். கையில் தேங்காயுடன் வந்த அவர்கள், முதல்வர் கருணாநிதிக்கு நல்ல புத்தி தர வேண்டும், அவர் ராமர் குறித்து இனிமேல் தவறாக பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி பூஜை செய்தனர்.
பின்னர் தேங்காய் உடைக்கவும் முயற்சித்தனர். ஆனால் தகவல் குறித்து அறிந்ததும் அங்கு போலீஸார் விரைந்து வந்து அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினருக்கும், வி.எச்.பியினருக்கும் இடையே, மோதல் மூண்டு விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications