2வது முறை உலக செஸ் சாம்பியன்; விஸ்வநாதன் ஆனந்த் சாதனை!
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில், உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், போரிஸ் ஜெல்பான்ட், விலாடிமிர் கிராம்னிக், பீட்டர் லீக்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஆனந்த் 13வது சுற்றின் இறுதியில் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இறுதிச் சுற்று நடந்தது. இதில் பீட்டர் லீக்கோவுடன், ஆனந்த் மோதினார். இதில் அவர் டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 20வது நகர்த்தலின்போது போட்டியை டிரா செய்தார் ஆனந்த். இதையடுத்து 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் ஆனந்த்.












Click it and Unblock the Notifications