For Quick Alerts
For Daily Alerts
Just In
வேதாந்தியை கண்டித்து ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
திருச்சி:
முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசிய முன்னாள் பாஜக எம்பி வேதாந்தியை கண்டித்து திருச்சியில் இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து அறிக்கை விட்ட வேதாந்தியைக் கண்டித்து திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
மாநில தலைவர் கே.மீனாட்சிசுந்தரம் தலைமையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெரும் திராளனோர் இதில் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். நேரு பேசுகையில், தமிழர்களின் காவலராக உள்ள முதல்வர் கருணாநிதிக்கு வேதாந்தி போன்றோர் மிரட்டல் விடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:58 [IST]