'ஆசன வாயில்' வைரம் கடத்தியவர் கைது!
சென்னை:
கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் ஆசன வாயிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள கடத்தல் வைரங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டாக்டர்களின் உதவியுடன் இந்த வைரங்களை அதிகாரிகள் வெளியே எடுத்தனர்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு நேற்று வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முஸ்தபா ஜமால் (43) என்பவர் பயணித்தார். விமானத்திலிருந்து இறங்கிய அவர் வெறும் கைப்பையுடன் வந்தார்.
நேராக சுங்கத்துறை அதிகாரிகள் செக்கிங் செய்யாமல் அனுப்பும் வழியான கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், ஜமாலை மடக்கி நிறுத்தினர். அவரது உடல் முழுவதும் ஸ்கேன் செய்தனர்.
அப்போது அவரது ஆசன வாயில் 2 சிறிய பிளாடிக் பைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் உதவியுடன் அந்த பிளாஸ்டிக் பைகளை வெளியே எடுத்தனர்.
அந்தப் பையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் இருப்பதை தெரிய வந்தது. இதுதவிர அவரது பையிலும் ஒரு பிளாஸ்டிக் பையில் வைரக் கற்கள் இருப்பது தெரிந்தது.
மொத்தம் அரை கிலோ எடையுள்ள 942 கற்கள் இருந்தன. வைரக் கற்கள் தவிர மரகதக் கற்களும் அதில் இருந்தன. ஜமால் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications