கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 3 மீனவர்களை மீட்க கோரிக்கை
நாகர்கோவில்:
கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 மீனவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையை சேர்ந்த கிங்ஸ்லி, சின்னதுரையை சேர்ந்த ஆன்றனி மற்றும் மரிய விஜயன் இரவிபுத்தன் துறையை சேர்ந்த சீமோன் ஆகிய 4 பேரும் தன்சானிய நாட்டை சேர்ந்த ஏஜென்சி மூலம் கொரிய கப்பலில் மீன்பிடிக்க சென்றனர்.
சீமோன் கப்பலில் கேப்டனாக பணியாற்றுகிறார். கென்ய நாட்டிலிருந்து ஏமன் நாட்டிற்கு கடந்த மே மாதம் 11ம் தேதி 2 கப்பலில் 23 பேர் சென்றனர்.
மே 15ம் தேதி இரு கப்பல்களையும் கடல் கொள்ளையர்கள் கடத்தினர். இதில் கிங்ஸ்லி, ஆன்றனி, மரிய விஜயன் ஆகியோர் சிக்கினார்கள். கடத்தப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மீனவர்கள் சார்பில் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications