கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 3 மீனவர்களை மீட்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil


நாகர்கோவில்:

கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 மீனவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையை சேர்ந்த கிங்ஸ்லி, சின்னதுரையை சேர்ந்த ஆன்றனி மற்றும் மரிய விஜயன் இரவிபுத்தன் துறையை சேர்ந்த சீமோன் ஆகிய 4 பேரும் தன்சானிய நாட்டை சேர்ந்த ஏஜென்சி மூலம் கொரிய கப்பலில் மீன்பிடிக்க சென்றனர்.

சீமோன் கப்பலில் கேப்டனாக பணியாற்றுகிறார். கென்ய நாட்டிலிருந்து ஏமன் நாட்டிற்கு கடந்த மே மாதம் 11ம் தேதி 2 கப்பலில் 23 பேர் சென்றனர்.

மே 15ம் தேதி இரு கப்பல்களையும் கடல் கொள்ளையர்கள் கடத்தினர். இதில் கிங்ஸ்லி, ஆன்றனி, மரிய விஜயன் ஆகியோர் சிக்கினார்கள். கடத்தப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மீனவர்கள் சார்பில் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+