For Daily Alerts
Just In
சேது சமுத்திரத்தால் ஆபத்து - கூறுகிறது இலங்கை நிபுணர் குழு
கொழும்பு:
சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கையின் கடற் பகுதிக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும் என இலங்கை ஹைட்ராலிக் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி மலித் மெண்டிஸ் கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக மலித் மெண்டிஸ் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மலித் மெண்டிஸ் கூறுகையில், இந்த திட்டத்தால் இலங்கை கடற்பகுதியில், கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படும். இதனால், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார் மெண்டிஸ்.
தங்களது ஆய்வறிக்கையை, இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் இக்குழு அளித்துள்ளது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 11:53 [IST]