ஓட்டுவதற்கு பஸ் கொடுக்காததைக் கண்டித்து அதிமுக டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்
சென்னை:
பேருந்துகளை இயக்க தங்களை அனுமதிக்காததைக் கண்டித்து சென்னையில் அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
திமுக கூட்டணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் கிட்டத்தட்ட பந்த்தான் நடந்து கொண்டுள்ளது. அரசுப் பேருந்துகள் முற்றிலும் ஓடவில்லை.
இந்த நிலையில் அதிமுகவைச் ேசர்ந்த அண்ணா தொழிற்சங்கப் பேரவையைச் சேர்ந்த மாநகர போக்குவரத்துக் கழக நடத்துநர்களும், ஓட்டுநர்களும் இன்று காலை சைதாப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் பஸ் டிப்போக்கள் முன்பு கூடினர்.
தங்களுக்கு பஸ்களை இயக்க அனுமதி கொடுக்காத போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் அரசைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் திமுக கூட்டணியைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications