ஜன்னல் 'சீட்' பிடிப்பதில் தகராறு; மன நோயாளிகள் சண்டை - ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil


சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மன நல மருத்துவமனையில் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்காருவது தொடர்பாக இரு மன நோயாளிகளுக்கு இடையே நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அரக்கோணத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (33). அதேபோல நெல்லை மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் அருள் ராஜ் (35). இருவரும் சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு மன நல பாதிப்பு இருப்பதை அறிந்த போலீஸார் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர்.

அப்போது இருவருக்கும், ஜன்னல் ஓரம் உள்ள இருக்கையில் அமருவது தொடர்பாக சண்டை மூண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது பாஸ்கரை, அருள்ராஜை மிகக் கடுமையாக தாக்கியதில் அவர் மயக்கமடைந்து விழுந்தார்.

உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+