19 புலிகள் பலி-ராணுவம், எல்டிடிஈ மறுப்பு
கொழும்பு:
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடந்த கடும் சண்டையில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் 27 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு நடந்த சண்டையில் 10 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். இதில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார், 7 பேர் காயமடைந்தனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் 7 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு ராணுவ வீரர் இதில் உயிரிழந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள விடுதலைப் புலிகளின் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், இது சாதாரண சண்டைதான். பெரிய அளவில் உயிரிழப்பு ஏதும் இல்ைல.
விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ராணுவம் கூறுவது தவறான தகவல். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார்.
புலிகள் தாக்குதல்- 7 ராணுவத்தினர் பலி:
இலங்கையின் மன்னார் பகுதியில் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இதில் புலிகளின் அதிரடி தாக்குதலில் 7 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதில் இலங்கையின் முக்கிய ராணுவ உயர் அதிகாரியான அவதியவன்னா கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications