கருணாநிதி மீது பாஜக புகார்-குழப்பத்தில் போலீஸ்
நாகர்கோவில்:
ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி கூறிய கருத்துக்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. இதைப் பதிவு செய்வது தொடர்பாக போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி சேது சமுத்திர திட்டம் குறித்தும் ராமர் பற்றியும் கூறிய கருத்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிசத்தின் முன்னாள் எம்.பி ராம்விலாஸ் வேதாந்தி முதல்வரின் நாக்கையும், தலையையும் துண்டிக்க வேண்டும் என்றார். இது கொத்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதி மீது 3 காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார்கள் தரப்பட்டுள்ளன.
நாகர்கோவில், சேரி காவல் நிலையத்தில் நகர செயற்குழு உறுப்பினர் ராஜன், கலைராஜன் ஆகியோர் புகார் கொடுத்துள்ளனர்.
கோட்டாறு காவல் நிலையத்தில் நகர செயற்குழு உறுப்பினர் ராகவன் புகார் கொடுத்துள்ளார்.
நேசமணி பகுதி காவல் நிலையத்தில் நகர பாஜக தலைவர் தேவ், துணைத் தலைவர் ஜெயக்கண்ணன் ஆகிய இருவரும் கருணாநிதி மீது புகார் கொடுத்துள்ளனர்.
இந்தப் புகார்களைப் பதிவு செய்வது குறித்து போலீஸாருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் புகாரை இதுவரை பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications