உண்ணாவிரதம் இருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், நடந்த திமுக உண்ணாவிரதத்தின்போது திமுகவைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்தவர் உதயசூரியன். 50 வயதாகும் இவர் தீவிர திமுக தொண்டர். சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி நேற்று முதுகுளத்தூரில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த உண்ணாவிரதத்தில் உதயசூரியனும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். மாலை 3 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார் உதயசூரியன்.
உதயசூரியனுக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். உதயசூரியன் மறைவால் முதுகுளத்தூர் திமுகவினர் சோகமடைந்தனர்.












Click it and Unblock the Notifications