திருடனைப் பிடிக்க முயன்றவர் ரயிலிலிலிருந்து விழுந்து பலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

ஓடும் ரயிலில் பிக்பாக்கெட் அடித்த திருடனை பிடிக்க முயன்றவர் ரயிலிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.

கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் தாசன். இவர் தனது மகளுக்கு திருவனந்தபுரத்தில் நடக்கவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்வதற்காக மகளோடு புறப்பட்டு சென்றார்.

அதற்காக ஆலப்புழையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு ரயிலில் புறப்பட்டு சென்றார். தனது மகளுடன் அவர் தனது மகளுடன் சாதாரண பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அருகிலிருந்தவன் அவருடைய பையிலிருந்து பர்ஸை எடுத்துக் கொண்டு ஓடினான்.

இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தாசன், பிக்பாக்கெட் திருடனை விரட்டி சென்றார். ஓடும் ரயிலில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ரயில் அதிகாலையில் வர்க்கலை என்னும் சந்திப்புக்கு அருகில் மெதுவாக சென்றது.

இதைப் பயன்படுத்திக் கொண்ட பிக்பாக்கெட் திருடன், தாசனை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தப்பி ஓடினான். தாசன் ரயிலுக்கும், வர்க்கலை சந்திப்பு பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களும், போலீசாரும் திருடனை விரட்டிப் பிடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+