பஸ் ஊழியர்களின் 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
நாகர்கோவில்:
சிஐடியூ அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் வரும் 4ம் தேதி துவங்கி தமிழகம் முழுவதும் 36 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதியின்படி, பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும். ஒரு வருடம் கடந்த பிறகும், ஊதிய ஒப்பந்தம் குறித்துப் பேசி முடிக்காததை கண்டித்தும், உடனே பேச்சு வார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தம் காண வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் வரும் அக் 4ம் தேதி காலை 8 மணி முதல் அக்டோபர் 5ம் தேதி இரவு 8 மணி வரை 36 மணி நேர உண்ணாவிரதம் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு இந்த போராட்டம் நடைபெறுகிறது.
நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ள உண்ணாவிரத்திற்கு சங்க மாநில துணை பொது செயலாளர் பொன்.சோபனாராஜ் தலைமை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications