For Daily Alerts
Just In
காவல் நிலையத்தில் வெடிகுண்டு 'டமார்'!
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இரணியில் காவல் நிலையத்திற்கு நேற்று மாவட்ட எஸ்.பி. வருவதாக இருந்தது. இதையடுத்து காவல் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு மர்மப் பொருள் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. ஒரு காவலர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், குமரி மாவட்ட எஸ்.பி. சந்தோஷ்குமார் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிபொருள் தவறி கீழே விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:53 [IST]