நாகை விஞ்ஞானிக்கு ஜெர்மன் விருது!
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
நாகை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு ஜெர்மன் அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். உயிரியல் துறை முதுகலை பட்டம் பெற்றவர். இவர் ஜெர்மன் பெர்லின் மேக்ஸ் பிளாங்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிரியல் துறை ஆராய்ச்சி படிப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார்.
இதை மிக சிறந்ததாக தேர்வு செய்த அந்நிறுவனம் ஜெர்மன் ஆராய்ச்சி அறக்கட்டளை எம்இ நோதர் சார்பில் ரூ. 7 கோடியை பரிசாக வழங்குகிறது. இத்தொகையினை இவர் 5 வருடம் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
இவர் 2006 முதல் ஜெர்மனில் உள்ள ஊசா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications